Tuesday, March 4, 2008

வைரபாரதி ghazal




வாழ்வின் ஆழத்தில்

பிறவிகளின் விதை


காலம் சில
வலிகளையும் கொடுக்கும் என்பதால் தான்
கடிகாரத்தில் முட்கள் ..!


நீ அழைத்து வராவிட்டால்
என் மூச்சு காற்றுக்கு
உயிரின் முகவரி எப்படி தெரியும்?


கண்ணீர்;
துக்கத்தின் முற்றுபுளியாக
உதிர்கிறது

வைரபாரதி மின்னல்கள்



வாழ்கை ஒரு நீண்ட காத்திருப்பு
ஆனால்
எதற்காகவும் அல்ல..


யார் கேட்டு கொண்டிருப்பது?
இரு மூங்கில்கள் உரசுவதில்
புல்லாங்குழலின் கீதங்களுக்கான
தாள லயங்கள்..!


குளத்தில்
கிளையின் பிரதிபலிப்பு
தாவிய குரங்கு மூழ்கி போனது !